சென்னை: அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். 13-ம் தேதி காலை 7 மணி முதல் 14-ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகள் ஏவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே போதுமான விசாரணையை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது என்று என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
The post அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக் கூடாது: செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.